புதன், 29 ஆகஸ்ட், 2012

பெண்களுக்கு உச்ச கட்டத்தை வர வைக்க என்ன செய்யலாம்?


கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. 
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலுத்தலாம்.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மையானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவிக்குப் பின் 
கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்
நன்றி- இளமை

உயிர்


ஆனால், மாஸ்டர்ஸ் காலத்தில் இவ்வளவு மருந்துகள்கிடையாது. அதனால் ஒரு டாக்டருக்குரிய தொழில் தர்மத்தை மீறி, அவரது கௌரவத்துக்கே களங்கம் நேர்கிற ஒருவிஷயத்தை அவர் முயன்று பார்த்தார்.



கம்யூனிசசெல்வாக்கோடு வல்லரசாகி அமெரிக்காவை ரஷ்யா மிரட்டிக் கொண்டிருந்த சமயம் அது!கம்யூனிச தத்துவம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலும்அந்த சித்தாந்தம் நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. அப்போது அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பலரையும் கம்யூனிஸ்ட்கள் எனசந்தேகித்து, கேள்வி கேட்காமல்சிறையில் அடைக்கும் பழக்கம் இருந்தது. ஜோ மெக்கார்தி என்ற செனட்டருக்கு இதுதான்வேலை. கின்ஸியின் ஆராய்ச்சி அவரை கொதிக்க வைத்தது. ‘‘கின்ஸியைஆராய்ச்சி செய்ய வைத்தது கம்யூனிஸ்ட்கள்தான். அமெரிக்க சமூகத்தை அழிக்கதிரைமறைவில் கம்யூனிஸ்ட்கள் செய்த சதிதான் இது’’ என்றார் அவர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாரையாவது கின்ஸிதற்செயலாக எப்போதாவது ரோட்டில் பார்த்து சும்மா ஹலோ சொன்னார் என செய்திகிடைத்திருந்தால்கூட போதும்... கின்ஸியை சிறையில் தள்ளி கொன்றே போட்டிருப்பார்கள்.ஆனால், கின்ஸியை சிறையில் அடைக்கும் அளவுக்குமெக்கார்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் கின்ஸி தப்பித்தார்.

இருந்தாலும் மதத்தலைவர்கள் அவரை சும்மா விடவில்லை. ஏற்கெனவேஒழுக்கக் கேடு மலிந்திருக்கும் நாட்டில், இந்தப்புத்தகங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கொதித்தார்கள். கின்ஸி அவர்களை அலட்சியம் செய்தார். ‘‘என்னுடையஆராய்ச்சியை விமரிசனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. விஞ்ஞானிகள் சமுதாயம் அதைமதிப்பீடு செய்யட்டும். அவர்கள் என் ஆராய்ச்சியில் தவறு இருப்பதாக சொன் னால் நான்ஏற்றுக் கொள் கிறேன்’’ என்றார்.
மார்கரெட் மீட்என்ற பெண்மணி அந்த சமயத்தில் அமெரிக்காவே மதித்த மானுடவியல் அறிஞர். அவர்தான்அறிஞர் சமூகத்திலிருந்து முதன்முதலாக கின்ஸிக்கு எதிராகக் குரல் கொடுத் தவர்."கின்ஸியின் புத்தகங் களை தடை செய்ய வேண்டும்.அதற்காக நான் போராடுவேன்" என அவர்குரல்கொடுக்க,
பெண்கள்அமைப்புகள், தங்களுக்கு வலுவான ஆதரவுகிடைத்த தெம்பில் இன்னும் ஆக்ரோஷம் காட்டின.

மார்கரெட்கூடகின்ஸியின் புத்தகங்களில் புள்ளிவிவரக் குறைகளையோ, அறிவியல் ரீதியானதவறுகளையோ சொல்லவில்லை. சமுதாயத்தில் தவறான பழக்கங்களை இது வளர்த்துவிடும்என்றுதான் அவர் கவலைப்பட்டார். ‘‘நிறைய பெண்கள்தப்பு செய்யலாம். நான் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்கள் பயந்துகொண்டுதான் தப்பு செய்கிறார்கள்.மற்ற பெண்கள் எல்லாம் கற்புநெறியோடு வாழும்போதுநான் மட்டும் ஏன் இப்படி மாறிவிட்டேன் என்ற குற்றஉணர்ச்சி தப்பு செய்யும் பெண்களை அடிக்கடி முள்ளாகக் குத்துகிறது. இதனால் அவர்கள்காலப்போக்கில் திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தப் புத்தகம்அந்த குற்ற உணர்ச்சியைப் போக்கிவிடும்.

கணவனை விட்டுஅடுத்த ஆணுடன் முறைகேடான தொடர்பு வைத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும், ‘நான் மட்டுமா தப்பு செய்கிறேன்? அமெரிக்க பெண்களில் நான்கில் ஒருத்தி செய்யும்அதே விஷயம்தானே இது! என நினைக்க ஆரம்பித்துவிட்டால், அவ்வளவுதான்... அமெரிக்காவில் குடும்ப அமைப்பேஉடைந்து சிதறிவிடும். இதைத்தான் கின்ஸி விரும்புகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பினார் மார்கரெட்.


ஆனால் கின்ஸிதெளிவாக இருந்தார். ‘‘அமெரிக்கர்களைஅசிங்கப்படுத்தவோ, குடும்ப அமைப்பைசிதைக்கவோ நான் ஆசைப்படவில்லை. நானும் அன்பான மனைவி, மூன்றுகுழந்தைகள் என இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தும் அமெரிக்கன்தான். ஆனால், குடும்பம் வேறு... ஆராய்ச்சி வேறு. சமூகத்தில்அமைதியாக நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், அவலங்களையும்கண்டும் காணாமல் விட்டு, ‘எல்லோரும்ஒழுக்கமான பாதையில் போகிறார்கள் என்று குருட்டுத்தனமாக நம்புவது, அறிஞர்களின் வேலை இல்லை.மக்கள்தொகை கணக்கில்லாமல் பெருகுவது, புதிது புதிதாகபால்வினை நோய்கள் வருவது, இளம் வயதிலேயேபெண்கள் கர்ப்பமாவது, பிஞ்சுக் குழந்தைகள் மீதுசெக்ஸ் சித்ரவதை என ஏராளமான விஷயங்கள் தப்புத்தப்பாக நடக்கின்றன. எதிர்காலத்தில்இவை இன்னும் மோசமாகலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்... யார் குற்றவாளி... இந்தத்தவறுகளை தவிர்க்க என்ன வழி என ஆராய்ச்சி செய்யாமல் விட்டால், இன்னும் சில தலைமுறைகள் தாண்டி உலகமேவெறியர்களின் கூடாரமாகி விடும். மனிதர்களின் செக்ஸ் பழக்கங்கள் பற்றிஆராய்ந்தால்தான் இதன் பின்னணி புரியும். அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நன்மைசெய்யும் ஆராய்ச்சியைத்தான் நான் செய்தேன்’’ என்றார் அவர்.

செக்ஸாலஜியின்தந்தை என்று இப்போது கின்ஸி புகழப்படுகிறார். பக்தர்கள் புண்ணியத் தலங்களுக்குயாத்திரை போவதுபோல, உலகெங்கும் இருக்கும்செக்ஸாலஜி நிபுணர்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது போக நினைப்பது, அவர் நிறுவிய கின்ஸி ஆராய்ச்சிநிலையத்துக்குதான்! அமெரிக்க சமூகம் பற்றி அவர் சொன்ன எல்லாமே, உலகத்துக்கே பொருந்தும் உண்மை என்பது ஐம்பதுஆண்டுகள் கழித்து இப்போது புரிகிறது.

ஆனால், அவர்மீது செக்ஸ்வெறிபிடித்த மனநோயாளி’, ‘குழந்தைகளைசெக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கியவர் என ஏகப்பட்டகுற்றங்களை பலர் சுமத்த, இன்றைய தேதிவரைஅதற்கெல்லாம் பதில் சொல்லியபடி இருக்கிறது கின்ஸி நிலையம்.
    
எல்லாஎதிர்ப்புகளையும் சமாளிக்கிற ஒருவர், அவரது குடும்பம்தாக்கப்படும்போது நிலைகுலைந்து போவார். கின்ஸியை அப்படித்தான் அழிக்கப்பார்த்தார்கள்.
‘‘செக்ஸைப் பற்றி இவ்வளவுஅருவருப்பான ஆராய்ச்சியை கின்ஸி செய் யக் காரணம் இருக்கிறது. அடிப்படையில் அவர்செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளைக் கொண்ட ஒரு மனநோயாளி. அவருக்கு எந்நேரமும்செக்ஸைப் பற்றிய நினைப்புதான். திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தாலும், அவர் ஹோமோசெக்ஸ் பிரியராக இருந்தார்.அதனால்தான் அமெரிக்கர்கள் எல்லாம் அதே பழக்கம் உள்ளவர்களாக அவருக்குத்தெரிந்தார்கள். அது மட்டுமில்லை... தன் மனைவியையே விநோதமான செக்ஸ் உறவுகளில் ஈடுபடவைத்து, ஆபாசப்படம் எடுக்க முயன்றார் கின்ஸி. இதனால்அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சரியான உறவு இல்லாமல் போனது. தன் உதவியாளர்கள்சிலரையும் கூப்பிட்டு, ‘உன் மனைவியோடு செக்ஸ்உறவில் ஈடுபடுவதை ஆராய்ச்சிக்காகப் படமெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் கின்ஸி. இதனால் பலர்அவரிடமிருந்து விலகிவிட்டார்கள்!’’

இப்படி ஒருவதந்தி திட்டமிட்டுக் கிளப்பப் பட்டது. இது பத்திரிகைகளில்கூட செய்தியாகவெளியானது. கின்ஸியிடம் இதுபற்றி சிலர் கேட்டனர். ‘‘விலங்குகள்எப்படி உறவு வைத்துக் கொள்கின்றன என்பது பற்றிய படங்கள்தான் இப்போது உள்ளன.மனிதர்கள் உறவு கொள்வது பற்றிய டாகுமென்டரி படங்களை எடுப்பது சாத்தியமில்லை.உறவுக்காட்சிகள் பற்றிய சில புகைப்படங்கள்தான் என்னிடம் உள்ளன. அதுகூட வேறுசிலர்எடுத்துக் கொடுத்தது’’ என்று வெளிப்படையாகப்பதில் சொல்லி இந்த வதந்தியை சாகடித்தார் கின்ஸி.

ஆனால், அமெரிக்காவில் சமூக ஒழுக்கத்தைக் காக்கும் ஓர்அமைப்பை நடத்திவரும் ஜூடித் ரீஸ்மேன் என்ற பெண்மணி, கின்ஸி பற்றிஎழுப்பி வரும் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது, கின்ஸி நிலையம். ஆர்.எஸ்.வி.பி. (Restoring Social Virtue and Purity in America) என்ற அமைப்பின்தலைவராக இருக்கிறார் ரீஸ்மேன். ‘‘நடுத்தரவர்க்கத்தின் மனோபாவத்தைக் களங்கப்படுத்த அறிவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் கின்ஸி. முறைகேடான செக்ஸ் உறவுகளை அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்தவர்அவர்தான். அமெரிக்காவில் செக்ஸ் தொடர்பான கலாசார நம்பிக்கை, சட்டங்கள், குற்றங் கள்எல்லாமே மோசமானதற்கு காரணம் அவர்தான். திருமணத்துக்கு முன்பே இளம்பெண்கள்கர்ப்பமாவது, இளம் குழந்தைகள் செக்ஸ்வெறியர்களால் சிதைக்கப் படுவது என எல்லா செயல்களுக்கும் காரணமான நரகத்தின் கதவுகளைஅமெரிக்காவில் திறந்துவிட்டவர் கின்ஸி’’ என கடுமையாகக்குற்றம் சாட்டினார் அவர். மற்றவர்கள் மாதிரி வெறுமனே அவர் பேச்சோடு நிற்கவில்லை.கின்ஸியின் ஆராய்ச்சி குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதினார். கின்ஸி செய்தஆராய்ச்சியைக் குற்றவியல் நோக்கோடு பார்த்தன அந்தப் புத்தகங்கள். ஆனால், அவை வெளிவந்தபோது கின்ஸி உயிரோடு இல்லை. அதனால்கின்ஸிக்குப் பிறகு அவரது நிலையத் தின் இயக்குநராகப் பணிபுரிந்த பால் கெப்பார்ட், அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குஆளானார். ஆண்கள் தொடர்பான தன்னுடைய செக்ஸ் ஆராய்ச்சி முடிவுகளில், ஆண் சிறுவர்கள் பற்றிய விவரங்களையும்குறிப்பிட்டு இருந்தார் கின்ஸி.

இதைத்தான்ரீஸ்மேன் வகையாகப் பிடித்துக் கொண்டார். ‘‘இந்தப்பட்டியலில் 317 சிறுவர்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின் றன. இதில் சில நிகழ்வுகளைநிமிடக் கணக்கில் விவரிக்கிறார் கின்ஸி. பக்கத்திலேயே கடிகாரத்தோடுஉட்கார்ந்துகொண்டு கணக் கெடுத்தால் தவிர, இவ்வளவுதுல்லியமாக இதை எழுத முடியாது. அந்த சிறுவர்களின் உணர்வுகளை விவரிப்பதும்பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் சாத்தியம். கின்ஸி இந்தக் குற்றத்தைச்செய்திருக்கிறார்’’ என்று தன் புத்தகத்தில்கடுமையாகத் தாக்கி எழுதினார் ரீஸ்மேன்.

அதே சமயத்தில்அமெரிக்காவில் இருக்கும் குடும்ப ஆராய்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு, வீடியோ படம் ஒன்றை எடுத்து, கின்ஸி மீது தாக்குதல் தொடுத்தது. பிரிட்டனில்இருக்கும் யார்க்ஷயர் டெலிவிஷன்

நெட்வொர்க், ‘கின்ஸியின் குழந்தை செக்ஸ் வெறியர்கள் என்ற பெயரில் பரபரப்பான டாகுமென்டரி படம் ஒன்றைஎடுத்து ஒளிபரப்பியது.

இந்த எல்லாகுற்றச்சாட்டுகளுக்கும் தெளிவாகப் பதில் சொன்னது கின்ஸி நிலையம். கின்ஸி பல சிறுவர்களை இன்டர்வியூ செய்தபோதுகூடஅந்த சிறுவர்களின் பெற் றோர்கள் முன்னிலையில்தான் செய்தார். அது மட்டுமில்லை... பலஆண்கள் தங்களது சிறுவயது அனுபவங்களை அவரிடம் சொன்னார்கள். அதுவும் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தகவல்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தாங்கள் நேரடியாகப் பார்த்தசிறுவர்களைப் பற்றிச் சொன்னவை.

இதுதவிர, ஒன்பது குற்றவாளி கள் தாங்கள் சிறுவர்கள் மீதுமேற்கொண்ட செக்ஸ் வன்முறை களைப் பற்றி சொன்னார்கள். இதில் மிஸ்டர் கிரீன் என்றுபுனைப்பெயர் தரப்பட்ட ஒருவன், தன் டைரியைகின்ஸியிடம் கொடுத்தான். அவன் 1917ல் ஆரம்பித்து 48ம் ஆண்டு வரை கிட்டத்தட்டஎண்ணூறு சிறுவர் களிடம் செக்ஸ் உறவு கொண்டான். அந்த எல்லா உறவுகளையும் ஆரம்பத்தில் இருந்து முடிக்கும் வரை நேரத்தைக் குறிப்பிட்டுத் துல்லியமாக வர்ணித்துஇருந்தான். கின்ஸி அவனது செயலை மன்னிக்க முடியாத குற்றம் என கண்டித்து இருக்கிறார்.அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டுதான் அவன் சிறையில் இருந் தான். அவன்கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் பெயரை மட்டும் மறைத்தார் கின்ஸி. தன்னுடையஆராய்ச்சி முடிவுகளில் அவர் சொல்லியிருந்த பெரும்பாலான விஷயங்கள் "மிஸ்டர்கிரீன்" சொன்னதுதான் என்றுவிலாவாரியாக விளக்கியது கின்ஸி நிலையம்.

அடுத்ததாகஇன்னொரு விஷயம் கிளம்பியது. இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டை ஹிட்லரின்ஜெர்மன் படை ஆக்கிர மித்து இருந்தது. அந்த சமயத்தில் போலந்து மக்கள் கடும்சித்ரவதைக்கு ஆளானார்கள். இந்த சித்ரவதை படையில் இருந்த ஜெர்மன் தளபதி ஒருவர், கிட்டத்தட்ட 800 போலந்து சிறுவர்களை பாலியல்பலாத்காரம் செய்தார். கின்ஸியின் ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தனது அனுபவங்களை எழுதி அனுப்பி வைத்தார். அதைப்படித்த கின்ஸி அவருக்கு, ‘உங்கள் அனுபவக்குறிப்புகள் என் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. அவற்றைப் படித்து மகிழ்ச்சிஅடைந்தேன்என பதில் எழுதியதாகஅடுத்தக் குற்றச்சாட்டு. சிறுவர்கள்செக்ஸ் சித்ரவதைக்கு ஆளானதைப் படித்து மகிழ்ச்சி அடையும் ஒரே ஆள் இந்த உலகத்தில்கின்ஸியாகத்தான் இருக்க முடியும் என்றனர் எதிர்ப்பாளர்கள்.

கின்ஸி நிலையம், அந்தத் தளபதிக்கு கின்ஸி எழுதிய கடிதத்தின்பிரதியை வெளியிட்டது. உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றது என வெறும் ஒப்புகை வாசகம் மட்டுமே அதில்எழுதியிருந்தார் கின்ஸி. அதோடு இந்தக் குற்றச்சாட்டு பிசுபிசுத்தது.

கடைசியாக இன்னொருவிஷயமும் சொல்லப்பட்டது. கின்ஸிஇன்டர்வியூ செய்ததில் 25 சதவிகிதம் குற்றவாளிகள், ஐந்து சதவிகிதம்செக்ஸ் தொழிலாளிகள். இப்படி சமூகத்தில் ஒழுக்கக்கேடானவர்களை விசாரித்து, அவர்கள் சொல்வதை வைத்து ஒட்டுமொத்தஅமெரிக்கர்களின் பழக்கம் இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்? அவர் சந்தித்த நபர்களில் கிராமத்து மக்கள், படிக்காதவர்கள் என யாருமே இல்லை. சமூகவிரோதிகள்செய்யும் தவறுகளை அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த பழக்கமாக அவர் காட்டிவிட்டார் என்றார்கள் அவரை எதிர்ப்பவர்கள்.

இதற்காககின்ஸியின் ஆராய்ச்சிப் படிவங்களை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினார், கின்ஸி நிலைய இயக்குநரான பால் கெப்பார்ட்.1979ம் ஆண்டு இப்படி திருத்தப்பட்ட கின்ஸியின் ஆராய்ச்சி அறிக்கை வெளியானது.சிறைக்கைதிகள் கொடுத்த வாக்குமூலங்களை அகற்றிவிட்டு, மற்றவர்களின்தகவல்களை மட்டும் வைத்துப் புள்ளிவிவரங்களைத் தொகுத்தபோது ஆச்சர்யம்தான். கின்ஸிஏற்கெனவே சொல்லியிருந்த புள்ளிவிவரங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவேஇப்போது வித்தியாசம் வந்தது. அதாவது, சிறைக்கைதிகளாகஇருக்கட்டும் அல்லது அமெரிக்க மக்களாக இருக்கட்டும்... செக்ஸ் மனோபாவம் என்பதுஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை பால் கெப்பர்ட் உறுதிப்படுத்தினார்.

கின்ஸியின்வாழ்க்கை, நாவலாக வந்தது. கடந்த 2004ம் ஆண்டு கின்ஸி என்ற பெயரிலேயேஹாலிவுட் படமாகவும் வெளியானது. அப்போது இதே பழைய சர்ச்சைகள் மறுபடியும் விஸ்வரூபம்எடுத்தன. தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதோ, அட்வைஸ் செய்வதோயாருக்குமே பிடிக்காது. அந்த வகையில் அமெரிக்கர்களுக்கு கின்ஸியைப் பிடிக்காமல்போனதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், இன்றைக்கு... அறியாமை என்ற எதிரியை வீழ்த்த அறிவு ஆயுதத்தோடு போராடியபோராளியாக அவர் உலகெங்கும் செக்ஸாலஜி நிபுணர்களால் கருதப்படுகிறார்.