சனி, 27 ஜூலை, 2013

மூட் கிளப்ப மார்பகங்கள் மட்டும் போதுமா ?


பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை முற்றிலும் நீங்கவில்லை. பெண்களின் உடல் உறுப்புகளை செக்ஸ் அப்பீலுக்காக மட்டுமே பார்க்கும் பார்வைகளே இங்கு அதிகம்.

அதிலும் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்கள் மத்தியில் பெரும் மோகமே உண்டு. செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாக மார்பகங்கள் பார்க்கப்பட்டாலும் கூட தாய்மையின் சின்னமாக அதை மதிப்பவர்கள், சிலரே.

மார்பகங்கள் செக்ஸுக்கா, குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கா என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டுக்கும் என்பது தான் இதுவரை கிடைத்து வரும் பதிலாக உள்ளது.

ஆனால், குழந்தைப் பிறப்பின் போது தான் பெண்களின் மார்பகங்கள் கெளரவமாக பார்க்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மை தான். பிற நேரங்களில் அதை செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

ஒரு பெண்ணுக்கு எப்படி கால்கள், கைகள், கண்கள் இருக்கிறதோ அதுபோலத்தான் மார்பகங்களும். ஆனால் மார்புகளை மட்டும் வித்தியாசமாக கையாளுவது காலம்காலமாக இருந்து வருகிறது. பெண்களைப் பார்க்கும் ஆண்களின் பார்வை மார்பகங்களின் மீதுதான் முதலில் படுகிறது. இது இயல்புதான்.

சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் கூட மார்பகங்களை கவர்ச்சிப் பொருளாக காட்டி காட்டியே அதன் உண்மையான அவசியத்தை மாசுபடுத்தி வைத்துள்ளனர். பெண்களின் மார்புகளைக் காட்டி எடுக்கப்படும் காட்சிகள் இல்லாத சினிமாக்களே இல்லை எனலாம்.

அதற்காக செக்ஸில் மார்புகளுக்கு வேலையே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டும் மார்பகங்கள் இல்லை. அதையும் தாண்டி புனிதமான வேலையை அவை செய்கின்றன.

பெண்கள் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மார்பகங்கள். பெண்களுக்கு எழில் தருவதாக மட்டுமல்லாமல் மிகவும் சென்சிட்டிவான ஒரு உடல் பாகமாகவும் அது திகழ்வதால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.

மார்பகப் பராமரிப்பி்ல் பெண்கள் கவனம் செலுத்தா விட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிரா அணிவது முதல் மார்பகங்களின் அளவு, அதில் தென்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பெண்கள் தொடர்ந்து கவனத்துடன் இருந்து வர வேண்டியது அவசியம்.

தங்களது மார்பக அளவுக்கேற்ற பிராக்களை அணிவது மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்ப காலத்தின் போதும், மாதவிடாயின் போதும் பெண்களின் மார்பகங்கள் பல மாற்றங்களை சந்திக்கும். அப்போது அதற்கேற்ற வகையில் உள்ளாடைகளை அணிய வேண்டும்.

சிலருக்கு இரவு நேரங்களில் பிராக்கள் அணிய வேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். பெரியஅளவிலான மார்பகங்களை உடையவர்கள் இரவிலும் கண்டிப்பாக பிராக்களை அணிவது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அப்போது தான் சீக்கிரமே மார்புகள் தளர்ந்து போவதை தடுக்க முடியும் என்பது அவர்களது அறிவுரை.

கர்ப்ப காலத்தில் மார்புகள் பெருக்கும். எனவே அதற்கேற்ற பிராவை அணிவது அவசியம். மேலும் இறுக்கமான பிராக்களை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், பாலூட்டுவதற்கு முன்பும், முடிந்த பின்னரும், சுடுநீரில் மென்மையான துணியை நனைத்து அதைக் கொண்டு மார்புக் காம்புப் பகுதிகளை துடைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கும், தாய்மார்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

சிலருக்கு மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். எனது வயதுப் பெண்களுக்குப் பெரிதாக உள்ளது. எனக்கு அவ்வாறு இல்லையே என்று வருந்தலாம். அதற்காக செயற்கையான முறையில் மார்பகங்களைப் பெருக்கிக் கொள்ள முயலுவதில் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. அப்படிச் செய்யப் போய் உடல்நலக் கேடுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட நேரிடும்.

அதற்குப் பதில் மார்பழகை எடுப்பாக்கிக் காட்டும், உடலுக்கு ஆபத்தை விளைவிக்காத சிறப்பு பிராக்களை அணியலாம். அதுபோன்ற அபாயமில்லாத வழிகளை நாடலாம்.

மார்பக புற்றுநோய் இப்போது படு சாதாரணமாக காணப்படுகிறது. இதை நாமே வீட்டில் கண்டுணர முடியும். முழு நீள கண்ணாடி முன்பு நின்று கொண்டு இரு கைகளையும் மேலே உயர்த்தித் தூக்கிக் கொண்டு இரு மார்பகங்களும் சரியான அளவில் உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மேலும் மார்பின் மையப் பகுதியை சுற்றுவது போல கையால் அழுத்திப் பார்க்கலாம். வலி இல்லாமல் கனமான கட்டி போல தென்பட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும். மேமொகிராம் மூலம் அது என்ன என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள்.

சில பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொள்ளும் அல்லது நீர் கட்டிக் கொள்ளும். பாலூட்டுவதை நிறுத்தும்போதும் இதுபோல ஏற்படும். எனவே அதை வைத்துக் கொண்டு மார்பகப் புற்றுநோயோ என்று பயந்து விடக் கூடாது.

மார்பக புற்று நோய் வந்தால் அதை அகற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சரை சரி செய்யும் வழிகள் இப்போது வந்து விட்டன.

இப்படி மார்பகங்கள் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டியதும், பாதுகாப்பதும், கவனமுடன் இருப்பதும் மிக மிக அவசியமாகும். மாறாக அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட பாராமல், முக்கிய உடல் உறுப்பாக கருதி விழிப்புடன் இருப்பது நல்லது.

வியாழன், 25 ஜூலை, 2013

அடிக்கடி உடலுறவு செய்வது அமைதியை கெடுக்குமா ?



தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் ஆழமான மூச்சு அதிக அளவில் ஆக்சிஜனை மூளைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மூளை மட்டுமல்லது உடலின் அனைத்து அவயங்களும் ஆரோக்கியமடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

செக்ஸ் உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் நன்மை செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவின் மூலம் இன்னும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

7500 கலோரி காலி!

வாரத்திற்கு மூன்று முறை உறவில் ஈடுபடுவதன் மூலம் 7500 கலோரிகள் வரை காலியாகிறதாம். இது 75 மைல்கள் நடந்து சென்றதற்கு சமம் என்கின்றனர் பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் எரிக்கப்பட்டு இதயத்தை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

வலி போயே போச்சு!

செக்ஸ் மூலம் உடம்பும் மனசும் லேசாகும். எத்தகைய வலி ஏற்பட்டாலும் அதை நீக்கும் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்குதுப்பா என்று உங்களவர் சொன்னால் உடனே அதை நீக்கும் வழிகளில் இறங்குங்கள். மெதுவாக மசாஜ் செய்ய ஆரம்பித்து அப்புறம் விளையாட்டை தொடங்கலாம்.

இதனால் உடலில் சுரக்கும் உற்சாக ஹார்மோன்கள் உடல்வலியை போக்கிவிடும் என்கின்றனர் அமெரிக்காவின் பிரபல பாலியல் நிபுணர்கள். அதேபோல் உறவில் ஈடுபடுவதன் மூலம் மனஅழுத்தம், சோர்வு நீங்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்பு அதிகமாகும்

மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவின் மூலம் ஆர்கஸசத்தின் போதும் உறவின் போதும் சுரக்கும் சுரக்கும் டிஹெச்இஎ (dehydroepiandrosterone) ஹார்மோன் சாதாரண நேரத்தில் சுரப்பதை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறதாம். தம்பத்ய உறவின் மூலம் சுரக்கும் ஆக்ஸிடோசின் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது.

மேலும் தாம்பத்ய உறவின் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இது இதயத்தை பலப்படுத்துவதோடு பெண் உறுப்பின் திசுக்களை புத்துணர்ச்சியாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் செக்ஸ் மூலம் ஆண் இனப்பெருக்க உறுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறதாம்.