திங்கள், 25 ஜூன், 2012

உயிர்-----9


இதற்கு என்றும், பெண்களை கிளர்ச்சியற்ற தன்மை உள்ளவர்கள்' எனவும் வகை பிரித்திருந்தனர். சிகிச்சையும்அவர்களுக்கு ஒரே முன்புவரை செக்ஸ் பிரச்னைகளுக்கு ஒரே பெயர்தான். பிரச்னையுள்ள ஆண்களை ஆண்மையற்ற வர்கள் விதமானதுதான். காரில் நான்கு டயர்கள். அதில் ஏதாவது ஒன்றுபஞ்சராகி இருக்கும். பஞ்சரை ஒட்டாமல் நான்கு டயர்களுக்கும் சும்மா காற்றடித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரிதான்செய்தார்கள். அதனால் பலனும் இல்லாமல் போனது. இப்போது இந்த இரண்டு வார்த்தைகளும்செல்லாதவை ஆகிவிட்டன.

உலகம் முழுக்கஇனம், நிறம், நாடு, மொழி என பலவிதங்களில் மனித இனம்வித்தியாசப்பட்டு இருந் தாலும் அவர்கள் எல்லோருக்கும் செக்ஸைப் பொறுத்தவரை ஒரேமாதிரியான உணர்வுகளே இருக்கும். இதில் ஒருவருக்கு பிரச்னை என்றால் ஒட்டுமொத்தமாகவேஅவருக்கு எல்லாம் முடியாமல் இருக்க முடியாது. சிலருக்கு செக்ஸ் ஆசையில் தான்பிரச்னை இருக்கும். ஆசை அதிகமாக இருக் கும் அல்லது குறைவாக இருக்கும். சிலருக்குஉணர்ச்சிவசப்பட்ட தன்மையை அப்படியே நிலைநிறுத்தி பரவசநிலைக்கு போக முடியாமல்இருக்கும். சிலருக்கு பரவச நிலையில் பிரச்னை இருக்கும். துரித ஸ்கலிதம் ஆகிவிடும்.அவரை விசாரித்து இந்த நான்கில் எந்த கட்டத்தில் அவருக்கு பிரச்னை என்று கேட்டு, அதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால் போதும்...பிரச்னை தீர்ந்துவிடும் என்பது இந்த ஜோடி சொன்ன விஷயம்.

ஹெலன் சிங்கர்கெப்ளான் என்ற உளவியல் நிபுணர், ‘‘எல்லாம் சரி...ஆசையை விட்டுட்டீங்களே! மனதில் ஆசை இல்லாமல் இரண்டு பேருக்கு மத்தியில் உறவுநடந்தால் அதில் பரவச நிலை வராது. அந்த ஆசையை மாஸ்டர்ஸ் முழுமையாக தன்ஆராய்ச்சியில் புறக்கணித்து விட்டார்’’ என்றுவேகப்பட்டார்.

ஆனால், இந்த வகை சிகிச்சையில் செக்ஸ் தொடர்பானபிரச்னைகளில் 99 சதவிகிதத்துக்கு தீர்வு இருக்கிறது என்ற மாஸ்டர்ஸும், வர்ஜினியா ஜான்சனும் இதற்காக ஒரு மையத்தையும்தொடங்கினர். அங்கு அவர் தந்த ஒரு அதிரடி சிகிச்சை இன்னும் பலத்த சர்ச்சையைஏற்படுத்தியது.

அது...தாயால்வளர்க்க முடியாத குழந்தையை செவிலித் தாய் வளர்ப்பது மாதிரி, செக்ஸ் அனுபவிப்பதில் பிரச்னை உள்ள ஆண்களுக்குசெவிலித் துணையாக பெண் ஒருவரை அனுப்பி படுக்கையில் செக்ஸை கற்றுத்தரும் சிகிச்சை.

இதில்தான்வாழ்க்கையில் பெரும் எதிர்ப்பை சந்தித்தார் மாஸ்டர்ஸ்.


வரலாற்றில்முதல்முறையாக பரிசோதனைக் கூடத்தில் செக்ஸை நிகழ்த்த வைத்து, அதில் ஆராய்ச்சிகள் செய்த கையோடுசிகிச்சையிலும் இறங்கினார் மாஸ்டர்ஸ். ஆராய்ச்சி நடந்த அதே செயின்ட் லூயிஸ் நகரில்கடந்த 70-ம் ஆண்டு அவரது மருத்துவ மனை துவங்கியது. அங்கு செக்ஸ் குறைபாடுகளுக்குஅவர் தந்த இரண்டு வார சிகிச்சை, பயங்கர பாப்புலர்ஆனது.

‘‘ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ படுக்கையில் செக்ஸ் உணர்வுஇயல்பாகவே கிளர்ந்தெழும். ஆனால், ஏதோ ஒருகுறுக்கீடு ஏற்படும் போதுதான், அதில் குறைபாடுஏற்படுகிறது. அதற்கு சமூகம் காரண மாக இருக்கலாம். மதம் காரணமாக இருக்கலாம்.அனுபவங் கள் காரணமாக இருக்கலாம். ஏதாவது மூட நம்பிக் கைகள்கூட காரணமாக இருக்கலாம்.அதை சரிசெய்யத் தான் சிகிச்சை. எப்படி செய்வது என எதையும் டாக்டர் கற்றுத்தரமுடியாது. அந்த தடைகளை அகற்றி அவர்களை இயல்பாக்கி விட்டால் போதும். அவர்களேஇயற்கையாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்’’ என்றுவெளிப்படையாகவே தனது சிகிச்சை அணுகுமுறை பற்றி சொன்னார் மாஸ்டர்ஸ்.

பெரும்பாலானவர்களுக்குபிரச்னை ஏதாவது தப்பான முன்அனுபவங்களாகவே இருக்கும். திருமணத்துக்கு முன் செக்ஸ்தொழிலாளிகளிடம் போயிருப்பார்கள். பதற்றமும், பயமும், முதல் தடவை என்கிற உணர்வும் ஏராளமானவியர்வையைக் கிளப்பிவிட்டு எல்லாவற்றையும் தப்பாக்கி இருக்கும். அந்த தருணத்தில், ‘நான் இதற்கெல்லாம் லாயக்கில்லை என்கிற மாதிரியான உணர்வு மனதில் ஆழமாகப்பதிந்து விட்டி ருக்கும். அதை அகற்றுவது கஷ்டமான விஷயம். திருமணத்துக்கு பிறகுமனைவியைத் தொடும்போதெல்லாம் அந்த உணர்வு மேலெழும்பி வர, செக்ஸ் உணர்வு இல்லாமல் போய் விடும். இதேபோலசிறுவயதில் பார்த்த செக்ஸ் காட்சிகள், நேர்ந்த துயரமான

அனுபவங்கள், அதனால் எழுந்த பாதிப்புகள்... இப்படி பலவிஷயங்கள் ஆண்களையும், பெண்களையும் பாதித்துஅவர்களை நோயாளிகள் ஆக்குகின்றன. மாஸ்டர்ஸ் வெளிப்படையான சிகிச்சை முறையைத்துவக்கியதற்கு முன்பெல்லாம் உளவியல் நிபுணர்கள் தான் இந்த மாதிரியானபிரச்னைகளுக்கு சிகிச்சை தருவார்கள். பிரச்னை உள்ள ஆசாமி ரகசியமாக தனியாக வருவார்.அவரின் மனைவிக்குக்கூட கணவனின் பிரச்னை தெரியாது, ஆண்டுக்கணக்கில்நீளும் சிகிச்சையில் பலன் பெரும்பாலும் இருக்காது. மாஸ்டர்ஸ் புகுத்தியசிகிச்சைமுறை இதிலிருந்து வித்தியாசமானது. பிரச்னை உள்ளவர் தனியாக வரக் கூடாது.தன் மனைவி அல்லது கணவனோடு வர வேண்டும். இரண்டு வாரங்களும் தினமும் மருத்துவமனைக்குவர வேண்டும். செக்ஸ் சிகிச்சை தருவதில் பயிற்சி பெற்ற ஒர் ஆணும், பெண்ணும் ஜோடியாக அவர்கள் முன் அமர்ந்துபேசுவார்கள். இயல்பாக இரண்டு ஜோடிகளும் பேசிக் கொண்டிருக்கும்போது பிரச்னை எங்கேஎன்பது புரிந்துவிடும். கொஞ்சம் உளவியல் சிகிச்சை, கொஞ்சம் மருத்துவசிகிச்சை என இரண்டையும் கலந்து கொடுத்தார் மாஸ்டர்ஸ். கிட்டத்தட்ட எண்பது சதவிகிதஜோடிகளுக்கு இதிலேயே பிரச்னை தீர்ந்து, அவர்கள்வாழ்க்கையில் முதல்முறையாக படுக்கை அறை சந்தோஷத்தை அனுபவித்தனர். பலருக்குகுழந்தையும் பிறந்தது.

இன்றுஉலகெங்கிலும் பல நாடுகளிலும் செக்ஸ் பிரச்னைகளுக்கு தரப்படும் சிகிச்சைக்குஅடிப்படை இதுதான்! ஆனால், அவரைப் போலஇரண்டு வாரம் வந்து தங்கச் சொல்லி யாரும் வற்புறுத்துவதில்லை. அந்த காலத்திலேயேஇந்த சிகிச்சைக்கு அவர்கள் 5000 டாலர் கட்டணம் வசூலித்தார்கள்.

இரண்டு வாரம் வேலைக்குப்போகாமல் பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு வந்து நான் சொல்லும் இடத் தில்தங்கு... இவ்வளவு ஃபீஸ் கொடு என்றெல்லாம் நம்மஊரில் சொல்ல முடியாது. இரண்டு வாரம் சம்பாதிக்கா மல் இருந்தால் அப்புறம் அவர்கள்டாக்டருக்கு எப்படி ஃபீஸ் கொடுப்பார்கள்? அது தவிர ஒரு செயற்கையானசூழ்நிலையில் இரண்டு வாரம் தங்கும்போது அவர்களுக்குள் எப்படியாவது நெருக்கத்தைஏற்படுத்தி உறவை சாத்தியமாக்கி விடும். ஆனால், திரும்பவும்வீட்டுக்கு போனதும் பழையபடி பிரச்னைதான்.

இதையெல்லாம்கணக்கில் எடுத்துக் கொண்டு இப்போதைய சிகிச்சை முறை வேறு மாதிரியான வடிவம்எடுத்திருக்கிறது. டாக்டரிடம் ஐந்து முதல் பத்து தடவை சிகிச்சைக்கு வந்தால்போதும்... அங்கு தரப்படும் சிகிச்சையை வைத்து வீட்டில் போய் அவர்கள்நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதில் சிகிச்சைஎன்பது மருந்து மற்றும் மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் கவுன்சிலிங் ஆகியஇரண்டும் இணைந்தது. மனதில் ஆசை இருந்து உடலும் ஒத்துழைத் தால் மட்டுமே ஒருவரால்செக்ஸில் ஈடுபட முடியும். இரண்டும் இப்படி இணைந்து உறவில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் மனதில் தோன்றும் பயமோ, அல்லது வேறு ஏதோஉணர்வுகளோ அவர்களது கவனத்தை திசைதிருப்புகிறது. அதை மாற்றி நூறு சதவிகிதஈடுபாட்டுடன் அவர்களை உறவு கொள்ள வைப்பதுதான் சிகிச்சை. இதில் வெறும் மாத்திரைகள்பலன் தராது. சும்மா அட்வைஸ் கொடுத்தாலும் வேலைக்கு ஆகாது. புதைகுழியில் சிக்கிஇருப்பவனுக்கு, ‘பயப்படாதே தம்பி! ஒன்றும்ஆகாது. நீ கவனமாக பார்த்து வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம்சொல்லப்படும் அட்வைஸ்கள் தேவையில்லை. அவனை அதிலிருந்து மேலே கொண்டுவர வேண்டும்.அதுதான் முக்கியம்.
செக்ஸ்சிகிச்சையும் இது மாதிரிதான்! அதை எப்படி செய்வது என்று சொல்லித் தருவது சிகிச்சைஇல்லை... அந்த உறவைத் தடுக்கும் பயம் அல்லது தயக்கத்திலிருந்து மீண்டு வரும்வழியைக் கற்றுத் தருவதுதான் சிகிச்சை. உதாரணமாக ஒரு குழந்தை கீழே விழுந்துஅடிபட்டு சிராய்ப்பு ஏற்படுகிறது... உடனே அது அழுகிறது. அந்த வலியை மூளை உணர்வதால்அது அழுகைக்கான கட்டளைகளை பிறப்பிக்கிறது... அதனால் அழுகை வருகிறது. அதேகுழந்தைக்கு ஒரு சாக்லெட் கொடுத்தால் அதை சுவைத்ததும் அழுகை நிற்கிறது. காரணம், இந்த இனிப்பு, வலியைமறக்கடிக்கிறது.

கவனம்திசைதிரும்புவதுதான் இதற்கு காரணம். ஒவ்வொரு செயலுக்கும் என்று மூளையில் தனித்தனிபகுதிகள் உண்டு. செக்ஸ§க்கும் மூளை, தண்டுவடம் ஆகிய இரண்டு இடங்களிலும் தூண்டல்தேவை. மனதில் உணர்வு எழுந்ததும், இவை தூண்டப்பட்டுசெக்ஸ் உறுப்புகளில் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து அது உறவுக்கு தயாராகிறது. இந்தசமயத்தில் வேறு ஏதோ நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும்போது மூளையின் தூண்டுதல்தற்காலிகமாக தடைபடுகிறது. இதன் எதிரொலியாக எல்லாமே கெட்டு விடுகிறது. இப்படி கவனம்சிதறாமல் நிலைநிறுத்துவதுதான் சிகிச்சை. இப்போது ஒவ்வொரு குறைபாட்டுக்கும் எனபலவகை மருந்துகள் வந்து விட்டதால் எல்லாம் சுலபமாக முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக